Tuesday, 12 March 2013

திராவிடம் குறித்த உங்களுடைய கருத்து என்ன?


கேள்வி...
நாம் தமிழர், பா.ம.க. போன்ற கட்சிகளும், சில தமிழ் அமைப்புகளும் திராவிடம் என்ற சொல்லையே இங்கிருந்து அகற்றிவிட வேண்டும், திராவிடம்தான் தனித்தமிழ்நாடு அடைய விடாமல் தடுக்கிறது, திராவிடத்தால்தான் வீழ்ந்தோம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றன. திராவிடம் குறித்த உங்களுடைய கருத்து என்ன?

பதில்...
அதிலிருந்து நான் வேறுபடுகிறேன். திராவிட இயக்கத்தின் தலைவர்கள் தோன்றி, இந்த மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் பாடுபடவில்லையயன் றால், இப்படிப் பேசுகின்ற சீமான் போன்றவர்களோ, மருத்துவர் இராமதாசு போன்றவர்களோ, திராவிட இயக்கத்தைக் குறை சொல்லிப் பேசுகின்றவர்களோ இந்த நாட்டில் அறியப்பட்டிருக்க முடியாது. நிச்சயமாக இவர்களின் கருத்துகள் ஊடகங்களில் வெளிவருகின்ற வாய்ப்புகள் இல்லாமலே போயிருக்கும். இவர்கள் சொல்லுகின்ற தமிழ்ச்சமூகத்திற்கு இவர்களை அடையாளப்படுத்தியதே அந்த திராவிடம் தான். எனவே திராவிடத்தைக் குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த ஒரு அமைப்பிலும் சில தவறுகள் குறைகள் இருக்கலாம். அவற்றைச் சுட்டிக்காட்டலாமே தவிர கண்மூடித்தனமாக எதிர்ப்பது தவறு. குணா போன்றவர்கள் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பேசிவருகிறார்கள். ரவிக்குமார் கூட இதுபோன்றுதான் பேசிவந்தார். அது பெரிய விவாதத்தை தோற்றுவித்தது. இதை நான் முற்றுமாக மறுக்கிறேன். காரணம், பெரியார் போன்றவர் கள், அறிஞர் அண்ணா போன்றவர்கள், தலைவர் கலைஞர் போன்றவர்கள் திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும், பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்று சேர்த்திருக்கவில்லை என்று சொன்னால், தமிழகம் அமைதிப்பூங்கா என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறோமே, அந்த நிலை வந்திருக்காது. எனவே திராவிடத்தை விமர்சனம் செய்கின்றவர்கள் வேறு விதமான லாபங்களுக்காகச் செய்கிறார்கள்.

திராவிட இயக்கத்தின் பேரால் ஆட்சிக்கு வந்தவர்கள் சில தவறுகளைச் செய்தால், அதைச் சுட்டிக்காட்ட இவர்களுக் குத் தார்மீக உரிமை இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக திராவிடம்தான் இந்த நாட்டை அழித்தது, திராவிடம்தான் இந்த நாட்டை ஒழித்தது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் தோன்றி, இத்தனை சமூகச் சீர்திருத்தப் பணிகளை ஆற்றிய பிறகும், இவர்கள் மனங்களில் இத்தனைப் பிற்போக்கான எண்ணங்கள் படிந்து கிடக்கின்றன என்று சொன்னால், திராவிட இயக்கம் என்ற ஒன்று இந்த மண்ணில் உருவாக்கப்பட்டிருக்கவில்லை என்றால், ஓர் அடிமைச் சமூகம், மனிதப் பண்புகளற்ற சமூகக் கட்டமைப்புதான் உருவாக்கப்பட்டி ருக்கும். இன்று தருமபுரி போன்ற நிகழ்வுகள், இன்னும் ஆயிரம் பெரியார்களின் தேவை இங்கே இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன்
நேர்காணல்: இரா. உமா.

No comments:

Post a Comment