Wednesday, 27 February 2013

'சாதியை ஒழிப்பதற்காக மூன்றாண்டு சிறை!!

நான் எதற்காகச் சிறை செல்கிறேன்? சூதாடிய குற்றத்துக்காகவா? கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்துக்காகவா? கொள்ளைக் குற்றத்துக்காகவா? கொலைக் குற்றத்துக்காகவா? மோசடிக் குற்றத்துக்காகவா? பலவந்தப் புணர்ச்சிக் குற்றத்துக்காகவா? பதுக்கல் - கலப்படம் குற்றத்துக்காகவா? சாதிவெறியின் கலவரக் குற்றத்துக்காகவா? என்ன குற்றத்துக்காக நான் சிறை செல்கிறேன்? சாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்! மறியல் செய்தேன்! சிறை சென்றேன்! சர்க்கார் கண் விழிக்கவில்லை. ஆகவே, சாதிக்கு ஆதாரமான சட்டத்தை கிழித்துத் தீயிலிட்டாவது இந்திய சர்க்காரின் (அரசின்) மனதை மாற்றலாமா, என்று கருதி அதைச் செய்தேன். இதில் எந்த உயிருக்கேனும் சேதமுண்டா? எந்தப் பொருளுக்கேனும் நாசமுண்டா? இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்றால், இதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டாமா? 'சாதியை ஒழிப்பதற்காக மூன்றாண்டு சிறை வாசஞ் செய்தான்' என்பதை விடப் பெரும்பேறு, முக்கியக் கடமை, வேறென்ன இருக்கிறது? - தோழர் ஈ.வெ.ரா ('விடுதலை', 09/11/1957)

No comments:

Post a Comment