Wednesday, 27 February 2013

பார்ப்பனர்களையும் தமிழர்கள் என்பது, இனத் துரோகச் செயலே!?

பார்ப்பான் [ஆரியன்] வருகைக்கு முன் முந்தைய இந்தியா முழுக்க வாழ்ந்து வந்தவர்கள் திராவிடர்கள் [ஆதி தமிழர்]. மத்திய ஆசியாவிலிருந்து ஆடு,மாடுகளை மேய்த்துக் கொண்டு கைபர்,போலன் கணவாய் வழியாக பிழைப்பு தேடி வந்த அயோக்கிய ஆரியக் கூட்டம் இந்தியாவிற்குள் புகுந்து திராவிடர் இனத்தையே சின்னா பின்னப்படுத்திவிட்டது. தமிழ் மொழியை சிதைத்து பல மொழிகளாக்கி விட்டது. தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் குறைந்த அளவே வடமொழி கலந்திருந்ததால், வடமொழியை தூக்கி எறிந்து விட்டு தமிழ் மொழியை தனித்தியங்கவைக்க முடிந்தது. மேலும் தமிழ் நாட்டிலுள்ள [ஈழம் உட்பட] தமிழர்களுடைய பெயர்களிலுள்ள வடமொழிப் பெயர்கள், தமிழாக்கப்படவேண்டும். பல ஊர்ப்பெயர்கள் தமிழாக்கப்படவேண்டும். சிந்துவெளி நாகரிகம் நிராவிட நாகரிகம் ஆகும். பார்ப்பன பி.ஜே.பி.கூட்டம் இதை ஆரிய நாகரிகம் என்று மாற்றியது, இது மீண்டும் திராவிடர் இயக்க முயற்சியால் மாற்றப்பட்டது. எகிப்திய நாகரீகம் கூட நிராவிட நாகரிகம் தான். 'பிணம் இடு' இடம் தான் 'பிரமிடு'. இன்று வரை தமிழை பார்ப்பனர்கள் 'நீச பாஷை' என்று தான் சொல்கின்றனர். ஆட்சிமொழிக் காவலர் இராமலிங்கனாரும், இராமானுஜ தாத்தாச்சாரியும் உறுதிப்படுத்தியுற்றனர். பார்ப்பனர்கள் யாரும் தமிழ்ப் பெயர்களை வைத்துக்கொள்வதில்லை. தந்தை பெரியார் 'நமிழ்நாடு-தமிழர்-தமிழர் பண்பாடு' என்ற நூலில் கூறியுள்ளபடி நிராவிட நாடு என்பது தமிழ் நாட்டை தான்[தற்போதைய], திராவிடர் என்பது தமிழரை தான். திராவிடர் கழகம் என பெயர் வைத்தது, பார்ப்பனர்களை நீக்கிவைக்கத்தான். பார்ப்பனர்களையும் தமிழர்கள் என்பது, இனத் துரோகச் செயலே. நன்றி- பார்த்தசாரதி

No comments:

Post a Comment