Wednesday, 27 February 2013

பெண்ணே நீ.....????

பெண்ணை தாயாக, கடவுளாக மதிக்கும் நாட்டில் இப்படியெல்லாம் நடக்கலாமா என்ற குரல் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஆம், பெண்ணை தாயாக மதிக்கும் நாட்டில்தான் நடக்கிறது. கடக்கிற பெண்ணையெல்லாம் தன் பிள்ளையின் தாயாக நினைக்கும் நாட்டில் இதுதான் நடக்கும்... மனுதருமம் கூட பெண்ணை போற்ற சொல்கிறது. பெண்கள் எங்கெல்லாம் மதிக்கப்படுகிறார்களோ, அங்கே கடவுள் மகிழ்ச்சியடைகிறார் . (அத்.3 சு.56) இப்படி சொல்லும் மனுதருமம்தான் கீழ்க்கண்ட பெண்களுக்கு எதிரான கருத்துகளையும் சொல்கிறது.. [{வினோதியினியை கொன்ற மனோபாவத்தின் வேர்களுக்கு பலநூறு ஆண்டுகளாக நீருற்றப்பட்டிருக்கிறது. அப்படி நீருற்றிய கோப்பைகளில் பிரதான கோப்பையான “மனு தருமம்”}] பெண்களும், சூத்திரர்களும் பொய், புரட்டு, பேராசை போன்ற குணங்களுக்கு சொந்தக்காரர்கள். (அத் 2 சு 1) மேன்மைக்குரியவர்கள் தன் தாய், மகள், சகோதரி உள்ளிட்டவர்களோடு தனிமையில் அமர மாட்டார்கள். (அத் 2 சு 215) தன்னைவிட தாழ்ந்த சாதி ஆணோடு புணர்ச்சியில் ஈடுபடும் பெண்ணை தண்டித்து தனிமைப்படுத்துதல் வேண்டும். (அத்.8 சு.364) ஆண்களை தன்வயப்படுத்துவது பெண்களின் இயல்பு; அந்த காரணத்தினால் அறிவிற்சிறந்தோர் பெண்களோடு தனித்திருப்பதில்லை. (அத்.2 சு.213) தன்னை குறித்த பெருமையோ அல்லது தம் உறவினர்கள் குறித்த பெருமையையோ தன் உள்ளத்தில் கொண்டுள்ள பெண்ணை, அந்நாட்டின் அரசன் நாய்களின் மூன் வீசி எரிய வேண்டும். (அத்.8 சு.370) தன் கணவனோடு சேர்ந்து பிள்ளை பெற முடியாத பெண், தன் கொழுநனோடோ அல்லது மாமனாரோடோ இணைந்தாவது குழந்தை பெற்றுக் கொடுக்க வேண்டும். (அத்.9 சு.58) இதுதான் மனுசாஸ்திரம் ? nandri-magizhnan.pa.ma

No comments:

Post a Comment