Wednesday, 27 February 2013
இராமன் கட்டிய பாலம் எங்கே?
இராமன் கட்டிய பாலம் எங்கே?
மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரின்
பெருக்கிய எழுமூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருங்கிய அமரர்க்கெல்லா நீண்நீதியாவர் அன்றே!
கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057
மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடை யாக இருந்தது என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக் கிறீ உடைத்து வழிவிட்டான் என்கிறது இப்பாடல்.
இராமன் கட்டிய பாலத்தை இராமனே உடைத்து விட்டான் என்று கூறுகிறது. கம்பராமாயணம்.. அப்படி இருக்கும்போது இல்லாத பாலத்தை, எப்படி உடைக்க முடியும்.
அங்கு இருப்பது மணல் திட்டுகள் தான்! பாலமல்ல.
இராமாயணத்தில் மகேந்திர மலைக்கு அருகிலிருத்து தான் இராமன் பாலம் கட்டியதாக சொல்லப்படுகிறது. மகேந்திர மலை மத்திய பிரதேசத்தில் ஜபுல்பூரில் உள்ளது, இராமன் கட்டிய பாலத்தை அங்கு போய் தேடிப்பாருங்களேன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment