Tuesday, 12 March 2013

திராவிடம் குறித்த உங்களுடைய கருத்து என்ன?


கேள்வி...
நாம் தமிழர், பா.ம.க. போன்ற கட்சிகளும், சில தமிழ் அமைப்புகளும் திராவிடம் என்ற சொல்லையே இங்கிருந்து அகற்றிவிட வேண்டும், திராவிடம்தான் தனித்தமிழ்நாடு அடைய விடாமல் தடுக்கிறது, திராவிடத்தால்தான் வீழ்ந்தோம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றன. திராவிடம் குறித்த உங்களுடைய கருத்து என்ன?

பதில்...
அதிலிருந்து நான் வேறுபடுகிறேன். திராவிட இயக்கத்தின் தலைவர்கள் தோன்றி, இந்த மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் பாடுபடவில்லையயன் றால், இப்படிப் பேசுகின்ற சீமான் போன்றவர்களோ, மருத்துவர் இராமதாசு போன்றவர்களோ, திராவிட இயக்கத்தைக் குறை சொல்லிப் பேசுகின்றவர்களோ இந்த நாட்டில் அறியப்பட்டிருக்க முடியாது. நிச்சயமாக இவர்களின் கருத்துகள் ஊடகங்களில் வெளிவருகின்ற வாய்ப்புகள் இல்லாமலே போயிருக்கும். இவர்கள் சொல்லுகின்ற தமிழ்ச்சமூகத்திற்கு இவர்களை அடையாளப்படுத்தியதே அந்த திராவிடம் தான். எனவே திராவிடத்தைக் குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த ஒரு அமைப்பிலும் சில தவறுகள் குறைகள் இருக்கலாம். அவற்றைச் சுட்டிக்காட்டலாமே தவிர கண்மூடித்தனமாக எதிர்ப்பது தவறு. குணா போன்றவர்கள் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பேசிவருகிறார்கள். ரவிக்குமார் கூட இதுபோன்றுதான் பேசிவந்தார். அது பெரிய விவாதத்தை தோற்றுவித்தது. இதை நான் முற்றுமாக மறுக்கிறேன். காரணம், பெரியார் போன்றவர் கள், அறிஞர் அண்ணா போன்றவர்கள், தலைவர் கலைஞர் போன்றவர்கள் திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும், பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்று சேர்த்திருக்கவில்லை என்று சொன்னால், தமிழகம் அமைதிப்பூங்கா என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறோமே, அந்த நிலை வந்திருக்காது. எனவே திராவிடத்தை விமர்சனம் செய்கின்றவர்கள் வேறு விதமான லாபங்களுக்காகச் செய்கிறார்கள்.

திராவிட இயக்கத்தின் பேரால் ஆட்சிக்கு வந்தவர்கள் சில தவறுகளைச் செய்தால், அதைச் சுட்டிக்காட்ட இவர்களுக் குத் தார்மீக உரிமை இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக திராவிடம்தான் இந்த நாட்டை அழித்தது, திராவிடம்தான் இந்த நாட்டை ஒழித்தது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் தோன்றி, இத்தனை சமூகச் சீர்திருத்தப் பணிகளை ஆற்றிய பிறகும், இவர்கள் மனங்களில் இத்தனைப் பிற்போக்கான எண்ணங்கள் படிந்து கிடக்கின்றன என்று சொன்னால், திராவிட இயக்கம் என்ற ஒன்று இந்த மண்ணில் உருவாக்கப்பட்டிருக்கவில்லை என்றால், ஓர் அடிமைச் சமூகம், மனிதப் பண்புகளற்ற சமூகக் கட்டமைப்புதான் உருவாக்கப்பட்டி ருக்கும். இன்று தருமபுரி போன்ற நிகழ்வுகள், இன்னும் ஆயிரம் பெரியார்களின் தேவை இங்கே இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன்
நேர்காணல்: இரா. உமா.

Thursday, 28 February 2013

சூத்திரர்களாக இருக்கிறோமே வெட்கப்பட வேண்டாமா?


இன்றைக்கு நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்றால், அது பார்ப்பானால் மட்டுமல்ல - நாமே அதை ஒத்துக் கொண்டு இருக்கிறோம். பார்ப்பான் நம்மைச் சூத்திரன் என்று சொல்லப் பயந்து விட்டான். ஆனால், நாமே நாம் இந்து என்று ஒப்புக் கொண்டு, கோயில்களுக்குச் செல்வதன் மூலமாகவும், நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொள்வதன் மூலமாகவும் சூத்திரன் என்பதை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு இருக்கிற அரசாங்கம் நமது அரசாங்கம் என்று பேர். என்னத்துக்காக இந்தப் பண்டிகைகளுக்கு எல்லாம் லீவு விட வேண்டும்? நம்மை இழி மகன் என்று முத்திரைக் குத்திக் கொள்ளவா? துணிச்சலாக இந்த லீவுகளை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டும். இந்த அரசாங்கங்கூட, இந்த இடிந்து போன கோயில்களை எல்லாம் பழுது பார்த்துப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது. என்ன அர்த்தம்? நம்மை என்றென்றும் இழிமக்களாக்கச் செய்யும் முயற்சிதானே இது? வெட்கப்பட வேண்டாமா?

எங்களுடைய இயக்கம் இந்த நாட்டில் தோன்றிப் பாடுபடவில்லை என்றால், இந்தக் கடவுளைச் செருப்பாலடித்து, சாத்திரங்களைக் கொளுத்தி எரிக்கவில்லை என்றால், நமக்குப் படிப்பு ஏது? உத்தியோகம் ஏது? இன்றைக்கு நூற்றுக்கு நூறு தமிழனாக இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்களே! இது எப்படி வந்தது? நம்முடைய முயற்சியால் அல்லவா?

29.8.73 அன்று சிதம்பரத்தில் விநாயக சதுர்த்தி கண்டனப் பொதுக் கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து

காவி தீவிரவாதம்??


காவித் தீவிரவாதம் பொய்யா?

காவித் தீவிரவாதம் என்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் கூறிவிட்டாராம். ஆகா, அமைதியின் சொரூபமான எங்களைப் பார்த்து நாக்கின் மேல் பல்லைப் போட்டுச் சொல்லலாமா? எங்களைவிட அகிம்சாமூர்த்திகள் உலகில் உண்டா என்று சூலத்தைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டுள்ளது - சங்பரிவார்கள் கும்பலும் - அதன் அரசியல் வடிவமான பி.ஜே.பி.யும்.

இன்றைய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே மட்டுமல்ல; இதற்குமுன் உள்துறை அமைச்சராகவிருந்த ப. சிதம்பரம் அவர்களும் இதே குற்றச்சாற்றை வைத்ததுண்டு.

நாடாளுமன்றம் நடக்கவிருக்கும் கால கட்டத்தில் அவை சுமுகமாக நடக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி காரணமாக உள்துறை அமைச்சர் ஷிண்டே நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது; நான் கூறியதன் காரணமாக யார் மனமாவது புண்பட்டு இருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று கூறித் தன் பெருந்தன்மையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதனை வைத்துக் கொண்டு, பார், பார், நாங்கள் உத்தமப் புத்திரர்கள் என்று காவிக் கூட்டம் மார்தட்டுமானால், அதனை விடப் பரிதாபம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் ஒவ்வொரு முறையும் ரகளையில் எதிர்க்கட்சியான பி.ஜே.பி. ஈடுபட்டு வருவதை வாக்காளப் பொது மக்கள் தெரிந்து வைத்துக் கொண்டுதான் உள்ளனர். நாடாளுமன்றத்திற்கு இவர்களை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பியது, பிரச்சினைகளை எடுத்துக் கூறத்தானே தவிர, நாடாளு மன்றத்தையே செயல்பட விடாமல் முடக்கு வதற்கல்ல.

ஷிண்டேயின் வருத்தம் தெரிவிப்பு மூலம், அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கு நாடாளு மன்ற ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையையும் எதிர்க்கட்சியான பி.ஜே.பி.க்கு அதில் நம்பிக்கை இல்லை என்பதையும் வெளிப்படுத்தி விட்டது என்றுதான் கொள்ள வேண்டும்.

காவிப் பயங்கரவாதம் பற்றி உள்துறை அமைச்சர் கூறியதற்குப் போதுமான தக்க ஆதாரங்கள் உண்டு என்று உள்துறை மூத்த செயலாளர் ஆர்.கே.சிங் அய்.ஏ.எஸ். கூறியுள் ளாரே! அவர் என்ன அரசியல்வாதியா? சகல தகவல்களையும் அறிந்து வைத்துக் கொண்டி ருக்கும் இடத்தில் இருக்கக் கூடிய அதிகாரி யாயிற்றே!

எந்த அளவுக்குக் காவிப் பயங்கரவாதம் நிர்வாண கோலத்தில் தாண்டவம் ஆடுகிறது என்பதற்கு மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று போதாதா?

இராணுவத் துறையில்கூட ஊடுருவி இருக் கிறார்களே, இராணுவத்துறையில் மட்டும் கிடைக் கும் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து இவர்களுக்கு எப்படி கிடைத்தது?

இராணுவக் கல்லூரி வைத்து, சங் பரிவார்க் கும்பலுக்குப் பயிற்சி கொடுப்பதும் இவர்கள்தானே!

மாலேகான் குண்டு வெடிப்பில் உண்மைக்கு மாறாக வழக்கை திசை திருப்பிய நிலையில், அதன் உண்மையைக் கண்டுபிடித்த காவல்துறை அதிகாரி ஹேமந்த்கார்கரே சுட்டுக் கொல்லப் பட்டது எப்படி? அதன் பின்னணியில் இருந்த வர்கள் யார்? என்ற கேள்வியை மத்திய அமைச்சராக இருந்த அப்துல் ரகுமான் அந்துலே நாடாளுமன்றத்தில் எழுப்பவில்லையா?

பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் யார்? நாங்கள்தான் பாபர் மசூதியை இடித்தோம் என்று மக்களவையில் அதிகாரப் பூர்வமான எதிர்க் கட்சியின் தலைவர் சுஷ்மா சுவராஜ் பகிரங்கமாகச் சொல்லவில்லையா?

இந்த நிலையில் காவித் தீவிரவாதிகள் என்று சொன்னதும் ரோஷம் பொத்துக் கொண்டு கிளம்பி விட்டதுபோலும்!

ஊருக்கு ஊர் திரிசூலங்களை மக்களுக்கு வழங்கி வன்முறையைத் தூண்டும் வி.எச்.பி. காவிக் கூட்டத்தைச் சேர்ந்தது அல்லவா? உண்மையைச் சொன்னால் எரிச்சலா?

உள்துறை அமைச்சர் ஷிண்டே குறிப்பிட்ட காரணத்துக்காக வருத்தம் தெரிவித்திருக்கலாம். ஆனால் வெகு மக்களுக்குக் காவி தீவிரவாதம்பற்றி மிக நன்றாகவே தெரியும்.

Wednesday, 27 February 2013

பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு???

சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம் அம்மா, அக்கா எங்கே என்று விசாரித்தனர்: சேனல் 4 தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி ‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களின் தயாரிப்பாளர் கேலம் மெக்ரே ஈழத்தமிழர் படுகொலை குறித்து பரபரப்பான பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு: கே: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படங்கள் யாரால் எடுக்கப்பட்டது? ப: பாலச்சந்திரன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோ பதிவில் இருந்து எடுக்கப்பட்டவை. 2009 மே மாதம் 19-ம் தேதி காலை அந்த வீடியோ எடுக்கப்பட்டது. இலங்கை ராணுவத்தில் இருக்கும் படைப் பிரிவுகளிலேயே 53ம் படைப் பிரிவுதான் மிகவும் கொடூரமானது. அவர்கள்தான் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை எதிர் கொண்டவர்கள். கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவர்கள். உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் எந்த தகவல்ம்களும் நான் நேரடியாகப் பார்த்தவை கிடையாது. அந்த வீடியோக்களை எடுத்த இரண்டு சிங்களப்படை வீரர்கள் என்னிடம் சொன்னவை. வீடியோவாகவும் பதியப்பட்டவை. அவர்கள் இருவரும் 53ம் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இறுதிக் கட்டம் வரை இலங்கையில் போர் நடக்கும் இடங்களில் பணியாற்றியவர்கள். போர் முடிந்தவுடன் அங்கிருந்து தப்பி வந்துவிட்டனர். எல்லா வீடியோக்களும் அவர்களின் மொபைல் போன்களில் எடுக்கப்பட்டவை. போர் நடக்கும் இடங்களில் வீடியோவோ, புகைப்படங்களோ எடுக்க அனுமதி கிடையாது. மொபைலில் எடுத்ததும் ரகசியமாக எடுத்தவைதான். இறுதிக்கட்டப்போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதி ஒரு கிலோ மீட்டர் சதுரப் பரப்பளவில் இருக்கும் சிறிய பகுதி. அந்தப் பகுதியில்தான் மக்களை கொன்று குவித்துப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தனர். 2009 மே மாதம் 18-ந் தேதி இரவு போர் தீவிரமடைந்து, அங்கிருக்கும் மரங்களையும் வாகனங்களையும் ராணுவம் கொளுத்தியது. அப்போது பாலச்சந்திரன் தன் மெய்காப்பாளர்கள் நால்வருடன் இரவு முழுவதும் பதுங்கு குழியில் இருந்திருக்கிறார். காலையில் வேறு வழியே இல்லாமல் மெய்க்காப்பாளர்களின் முடிவுப்படி 53ம் படையில் சரணடைந்தனர். மே 19ம் தேதி காலை 7.30 மணிக்கு அவர்கள் சரணடைந்ததும், பாலச்சந்திரனையும் அவரது மெய்க்காப்பாளர்களையும் தனித்தனியே பிரித்து விட்டனர். சரணடைந்தவர்களைப் பற்றி அங்கே பணியில் இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, கோத்தபாய ராஜபக்சவுக்கு தகவல் சொல்லி இருக்கிறார். கோத்தபாய இந்தத் தகவலை கருணாவிடம் சொல்லி இருக்கிறார். ‘அவனை உயிரோடு விட்டால், அது நமக்குத்தான் பிரச்சினை. அந்த பையன் ஒரு மைனர். சட்டத்தின்படி எந்தத் தண்டனையும் வழங்க முடியாது. சட்டத்தின் பிடியில் இருந்து அவன் தப்பிவிட்டால், விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராகக்கூட அவன் வந்து விடலாம். எல்லோரையும்போல அவனையும் கொன்று விடலாம்’ என்று கோத்த பாயவுக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார். அதற்கான உத்தரவு 53-ம் படைக்குப் பிறப்பிக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு பாலச்சந்திரன் உடல் அருகில் துப்பாக்கியை வைத்து ஐந்து முறை சுட்டிருக்கிறார்கள். யாரைக் கொன்றாலும் தடயம் இல்லாமல் எரித்து விடுவதும்தான் அந்த படைப்பிரிவின் வழக்கம். பாலச்சந்திரனையும் அப்படித்தான் தூக்கிச் சென்று விட்டனர். பாலச்சந்திரன் சரணடைந்தபோது காலை 7.30 மணிக்கு எடுக்கப்பட்ட வீடியோவும், 9.30 மணிக்கு அவர் கொல்லப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட வீடியோவும்தான் இப்போது வெளியானது. கே: பாலச்சந்திரனிடம் விசாரணை எதுவும் நடத்தப்பட்டதாகத் தெரிகிறதா? ப: பாலச்சந்திரனிடம் அவரின் அம்மா பற்றியும், அக்காவைப் பற்றியும் கேட்டார்களாம். ‘நானும் என் அம்மாவும் நேற்று ஒன்றாகத்தான் இருந்தோம். தப்பிக்க வேண்டும் என சொன்னவுடன் அவர்கள் ஒரு குழுவாகவும், நாங்கள் ஒரு குழுவாகவும் கிளம்பும் போது இடையில் அம்மாவைக் காணோம். அவர்கள் இப்போது எங்கே என்று எனக்கு தெரியாது’ என்று மட்டும் சொல்லி இருக்கிறார். வேறு எதுவும் அவரிடம் கேட்கவில்லை. சுடுவதற்காக துப்பாக்கியை பாலச்சந்திரனுக்கு அருகில் நீட்டியபோதுகூட, தன்னைச் சுடப்போசிறார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை. கே: வீடியோ பொய் என்று இலங்கை அரசு சொல்கிறதே? ப: அந்த மொபைலில் இருந்த வீடியோவை நானே பலமுறை பார்த்து அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்த பிறகுதான் ஆவணப்படம் எடுத்தோம். வீடியோவை இங்கிலாந்தில் ஆய்வுக்கும் உட்படுத்தினோம். வீடியோவில் இருப்பது அத்தனையும் உண்மை... உண்மை... உண்மை. இப்போதுகூட அங்கிருக்கும் தமிழர்கள் உணவு, உடை, தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு எந்த உதவிகளையும் இலங்கை அரசு செய்வது இல்லை. இவ்வாறு அவர் கூறினார். ‘நோ பயர் ஸோன்’ தொகுப்பில் இடம்பெற்ற வீடியோக்கள் பலவற்றைக் கொடுத்து உதவியவர் இலங்கையைச் சேர்ந்த கண்ணன். கடைசிக் கட்டப்போரில் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்தவர்களில் கண்ணனும் ஒருவர். அவர் சொல்கிறார். இந்த நூற்றாண்டின் மிகக்கொடிய இன அழிப்பின் சோகம் இது. மிகச்சிறிய பரப்பளவு கொண்ட பகுதி முள்ளிவாய்க்கால். அந்தப் பகுதிக்குள் லட்சக்கணக்கான தமிழர்கள் அடைபட்டிருந்தார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான். பாதிப்பேர் உணவு இல்லாமல் கடல் நீரைக் குடித்தே செத்துப்போனார்கள். தமிழ் மக்கள் கூட்டம் ராணுவத்திடம் சரணடைய வந்தனர். ‘நாங்கள் உங்களைச் சுட மாட்டோம். நீங்கள் அனைவரும் துணிகள் இல்லாமல், நிர்வாண நிலையில்தான் எங்களிடம் வரவேண்டும்’ என்று கட்டளை இட்டது ராணுவம். வேறு வழி இல்லாமல் அப்பா முன் மகளும், மகனின் முன் தாயும், அண்ணனின் முன் தங்கையும் நிர்வாணமாக வந்து சரணடைந்தனர். வவுனியாவில் இருக்கும் மெனிக் பார்ம் முகாமிலும், வெலிகந்தையில் இருக்கும் மறைமுக முகாமிலும் தினமும் இரவு நேரங்களில் பெண்களின் கதறல் சப்தம் கேட்டபடியே இருக்கும். இதுவரை இலங்கையில் கொல்லப்பட்ட மக்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் இருப்பார்கள். போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பலவற்றையும் இலங்கை ராணுவம் பயன்படுத்தியது. கொத்தணி குண்டு 500 சிறிய குண்டுகளாகப் பிரிந்து சென்று தாக்கும். உலக நாடுகள் எதுவும் அந்த குண்டுகளைப் பயன்படுத்தாது. ஒயிட் பாஸ்பரஸ் அதைவிடக் கொடூரமானது. ஒரே ஷாட்டில் 100க்கு மேற்பட்ட குண்டுகளை உமிழும். அந்த குண்டுகள் சுற்றியிருக்கும் எல்லா ஆக்ஸிஜனையும் உறிஞ்சிக் கொண்ட பிறகுதான் வெடிக்கும். அதனால் குண்டு பாதிப்பையும் தாண்டி பலர் மூச்சுத் திணறியே இறந்தனர். சானல் 4 வெளியிட்டு இருக்கும் ஆதாரங்கள் அத்தனையும் உதாரணங்கள் மட்டும்தான். ஒட்டு மொத்தமும் வெளிவந்தால், இலங்கை தாங்காது. -- ஜூனியர் விகடன் (27.02.13) via Andy Robert

பெண்ணே நீ.....????

பெண்ணை தாயாக, கடவுளாக மதிக்கும் நாட்டில் இப்படியெல்லாம் நடக்கலாமா என்ற குரல் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஆம், பெண்ணை தாயாக மதிக்கும் நாட்டில்தான் நடக்கிறது. கடக்கிற பெண்ணையெல்லாம் தன் பிள்ளையின் தாயாக நினைக்கும் நாட்டில் இதுதான் நடக்கும்... மனுதருமம் கூட பெண்ணை போற்ற சொல்கிறது. பெண்கள் எங்கெல்லாம் மதிக்கப்படுகிறார்களோ, அங்கே கடவுள் மகிழ்ச்சியடைகிறார் . (அத்.3 சு.56) இப்படி சொல்லும் மனுதருமம்தான் கீழ்க்கண்ட பெண்களுக்கு எதிரான கருத்துகளையும் சொல்கிறது.. [{வினோதியினியை கொன்ற மனோபாவத்தின் வேர்களுக்கு பலநூறு ஆண்டுகளாக நீருற்றப்பட்டிருக்கிறது. அப்படி நீருற்றிய கோப்பைகளில் பிரதான கோப்பையான “மனு தருமம்”}] பெண்களும், சூத்திரர்களும் பொய், புரட்டு, பேராசை போன்ற குணங்களுக்கு சொந்தக்காரர்கள். (அத் 2 சு 1) மேன்மைக்குரியவர்கள் தன் தாய், மகள், சகோதரி உள்ளிட்டவர்களோடு தனிமையில் அமர மாட்டார்கள். (அத் 2 சு 215) தன்னைவிட தாழ்ந்த சாதி ஆணோடு புணர்ச்சியில் ஈடுபடும் பெண்ணை தண்டித்து தனிமைப்படுத்துதல் வேண்டும். (அத்.8 சு.364) ஆண்களை தன்வயப்படுத்துவது பெண்களின் இயல்பு; அந்த காரணத்தினால் அறிவிற்சிறந்தோர் பெண்களோடு தனித்திருப்பதில்லை. (அத்.2 சு.213) தன்னை குறித்த பெருமையோ அல்லது தம் உறவினர்கள் குறித்த பெருமையையோ தன் உள்ளத்தில் கொண்டுள்ள பெண்ணை, அந்நாட்டின் அரசன் நாய்களின் மூன் வீசி எரிய வேண்டும். (அத்.8 சு.370) தன் கணவனோடு சேர்ந்து பிள்ளை பெற முடியாத பெண், தன் கொழுநனோடோ அல்லது மாமனாரோடோ இணைந்தாவது குழந்தை பெற்றுக் கொடுக்க வேண்டும். (அத்.9 சு.58) இதுதான் மனுசாஸ்திரம் ? nandri-magizhnan.pa.ma

தமிழ்நாடு தமிழருக்கே -பெரியார்

‘திராவிட’ எதிர்ப்பு என்ற குரல் பெரியாருக்கு எதிராக மீண்டும் சில மேடைகளில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. பெரியார் ‘திராவிடர்’ என்ற குறிப்புச் சொல்லை பயன்படுத்த நேர்ந்ததை விளக்குகிறார், இக்கட்டுரையில்! கன்னட, மலையாளிகள் சுயமரியாதை உணர்வற்றவர்கள் என்று கூறும் பெரியார், தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயரில்லாததால், தமக்கு நேர்ந்த மனத் துயரையும் சுட்டிக் காட்டுகிறார். பெரியாருக்கு எதிரான விமர்சனங்களை முன் வைப்போருக்கு, இந்த அறிக்கை உரிய பதிலைத் தருகிறது. "நாடு பிரிவினைக் கமிட்டி அறிக்கையைப் பார்த்தேன். இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிக்கை பற்றிய சேதிகளின் சுருக்கம் ஒருவாறு எனக்குத் தெரியவந்தது. பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால் - சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால், ஒன்று - கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றி இழிவோ, வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. மத மூடநம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள். இரண்டு - அவர்கள் இருவரும் மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாக இருப்பது பற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலை இல்லை. ஆகவே, இவ்விரு துறையிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணங் கொண்டவர்கள் - எதிரிகள் என்றே சொல்லலாம். மூன்றாவது - இவர்கள் இருநாட்டவர்களும் பெயரளவில் இருநாட்டவர்கள் ஆனாலும், அளவில் எஞ்சிய சென்னை மாநிலம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக்காரர்கள் ஆவார்கள். 1. சென்னை, 2. செங்கல்பட்டு, 3. வட ஆர்க்காடு, 4. சேலம், 5. கோவை, 6. நீலகிரி, 7. திருச்சி, 8. மதுரை, 9. ராமநாதபுரம், 10. திருநெல்வேலி, 11. தஞ்சை 12. தென்னார்க்காடு, 13. தென் கன்னடம், 14. மலபார். அப்படி 14-ல் 7-ல் ஒரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்யோகம் முதலியவைகளில் 3-ல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்து இருப்பதால் நம் நாட்டை தமிழ்நாடு என்றுகூட சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இதை நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாக பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால் நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன். இந்தப் பிரிவினை நடப்பதில் சேர்க்கை சம்பந்தமாக ஏதாவது சிறு குறைபாடு இருந்தாலும் அதை, மேற்கண்ட பெரும் நலத்தை முன்னிட்டு கூடுமானவரை ஒத்துப் போகலாம் என்றே எனக்குத் தோன்றிவிட்டது. மற்றும் இந்தப் பிரிவினை முடிந்து தமிழ்நாடு தனி நாடாக ஆகிவிட்டால் - நமது சமய, சமுதாய, தேசிய, சுதந்திர முயற்சிக்கும் அவை சம்பந்தமான கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும் நமது நாட்டில் எதிர்ப்பு இருக்காதென்றும், இருந்தாலும் அதற்கு பலமும், ஆதரவும் இருக்காதென்றும் கருதுகிறேன். நிற்க, இந்தப் பிரிவினை அமைப்பு ஏற்பாட்டில் எனக்கிருக்கும் சகிக்க முடியாத குறை என்ன இருக்கிறது என்றால், நாட்டினுடையவும், மொழியினுடையவும் பெயர் அடியோடு மறைக்கப்பட்டுப் போய்விடுகிறது என்கின்ற குறைபாட்டு ஆத்திரம்தான். நம் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு, இனத்திற்கு திராவிடம் என்று இருந்த பெயர், அது தமிழல்ல என்பதனாலும், நமக்கு அது ஒரு பொது குறிப்புச் சொல்லும், ஆரிய எதிர்ப்பு உணர்ச்சிச் சொல்லுமாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன். அதை ஆந்திர, கர்நாடக, கேரள நாட்டு மக்கள் அல்லாமல் தமிழ் மக்களில் சிலரும் எதிர்த்தார்கள். பின்னவர்கள் என்ன எண்ணம் கொண்டு எதிர்த்தாலும், அவர்களுக்கு மற்ற மூன்று நாட்டார் ஆதரவு இருந்தால் அதை வலியுறுத்துவதில் எனக்குச் சிறிது சங்கடமிருந்தது. அவர்கள் மூவரும் ஒழிந்த பிறகு அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவை இல்லை என்றாலும், திராவிடன் என்று சொல்லை விட்டுவிட்டு, தமிழன் என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் பிரிக்கலாம் என்றால், அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து, நானும் தமிழன் தான் என்று கூறிக் கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான். இந்த சங்கடத்திற்கு - தொல்லைக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, இப்போது மற்றொரு மாபெருந் தொல்லை நெஞ்சில் இடிவிழுந்தது போன்று வந்து தோன்றியிருக்கிறது. அதுதான் திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புங்கூட, மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் இடமில்லாத தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்ற பெயர்கூட இருக்கக் கூடாது என்று பார்ப்பானும், வடநாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்து பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரிகிறது. இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும் - எந்தத் தமிழனும் அவன் எப்படிப்பட்ட தமிழனனாலும் இந்த அக்கிரமத்தை சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். இதைத் திருத்த தமிழ்நாட்டு மந்திரிகளையும், சென்னை, டில்லி, சட்டசபை, கீழ் - மேல் சபை அங்கத்தினர்களையும், மிக மிக வணக்கத்தோடு இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன். தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடுமானால், பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும்? என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த காரியம் மாபெரும் அக்கிரமமான காரியம் என்பதோடு, மாபெரும் சூழ்ச்சி மீது செய்யப்பட்ட காரியம் என்றே கருதுகிறேன். “நம்நாடு எது நமது மொழி எது? நமது இனம் எது? என்பதையே மறைத்து விடுவதென்றால், பிறகு தமிழன் எதற்காக உயிர் வாழ வேண்டும்? என்பது எனக்குப் புரியவில்லை. ஆகவே இக்கேடு முளையிலேயே கிள்ளப்பட்டு விடும்படி முயற்சி செய்யும்படியாக எல்லாத் தமிழர்களையும் உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன்." - பெரியார், ‘விடுதலை’ 12.10.55 nandri-pasi

இராம இராஜ்யம்?

ஆண் - பெண் உறவுகள் பற்றிய நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய பிரபல வழக்குரைஞரும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரு மான ராம்ஜெத்மலானி அவர்கள் ராமன் ஒரு மோசமான கணவன் என்ற உண்மையைக் கூறி, இராமனை புருஷ உத்தமனாகக் காட் டும் பொய்மையை மறுத்துள்ளார். (ராம் ஜெத் மலானி மாநிலங்கள் அவை உறுப்பினரும் ஆவார்!) ராமன் ஒரு மோசமான கணவன். எனக்கு அவனைப் பிடிப்பதே இல்லை. யாரோ சில மீனவர்கள் கூறினார்கள் என்பதற்காக பரிதாபத்திற்குரிய சீதையை வீட்டை விட்டு வெளியேற்றி, காட்டுக்கனுப்பினான் அவன். அது மட்டுமா? லட்சுமணன் அவனைவிட மோசமானவன். சீதையைக் கடத்திக் கொண்டு போன நிலையில், அவளைத் தேடிக் கண்டுபிடித்து வரும்படி இராமன் லட்சுமணனிடம் கூறிய போது, லட்சுமணன் இராமனிடம் மறுமொழி யாக என்னால் அது இயலாது, காரணம் அவள் என் அண்ணி. அவள் முகத்தையே நான் பார்த்ததே இல்லை; எனவே அவளை என்னால் அடையாளம் காணவே முடியாது என்று கூறியதாக இராமாயணத்தில் உள் ளதைக் கூறினார் ராம்ஜெத்மலானி! அது மட்டுமல்ல; நம் நாடு மிகவும் சிக்கலான கட்டத்தில் உள்ளது. மதம் முழு மையாக மாறிவிட்டது! மதம் பயங்கர வாதத்தைத்தான் உருவாக்கியுள்ளது. கொலை செய்யும்படி, தலையைக் கொணரவும் கட் டளை இடும் அளவுக்கு மதம் பிடித்துள்ளது! - இவ்வாறு உண்மைகளைத் தோலுரித் துக் காட்டியுள்ளார் ராம்ஜெத்மலானி. தந்தை பெரியார் அவர்களும், சுய மரி யாதை இயக்கமும் இதனை சுமார் 80 ஆண்டு களுக்குமுன்பே சொல்லி- மக்களைப் பக்கு வப்படுத்தியதால்தான் இன்றும் தமிழ்நாட்டில் இராமனைக் காட்டி அரசியல் வட நாட்டைப் போல நடத்த எந்த அரசியல் கட்சியாலும் முடியவில்லை. இராமன் மோசமான கணவன் மட்டுமா? இல்லை இல்லை, அதைவிட அவன் ஒரு மோசமான மனிதனும் கூட! 1. சிறுவயதிலேயே தாடகையைக் கூனி யைக் கல்லெடுத்து அடித்தவன். 2. இராவணனின் தங்கை சூர்ப்பனகையை மானபங்கப்படுத்துவதாகக் கூறி, மூக்கை யும், முலையையும் அறுத்த மனிதாபி மானமற்றவன். 3. சீதையைத் தீக்குளித்து வரச் சொல்லி, (கடவுள் அவதாரமாயினும்) மனைவியின் கற்பு பற்றிச் சந்தேகப்பட்ட கொடுமைக்கார கயவன். 4. நிறைமாத கர்ப்பிணியான சீதையை காட்டிற்கு அனுப்பியவன். இராம இராஜ்யம் எப்படி? ஆளும்போது பார்ப்பனச் சிறுவன் ஒருவன் இறந்ததற்கு வர்ணதர்மம் கெட்டுப் போனதே காரணம். சூத்திர சம்பூகன் தவம் செய்தான். கட வுளை நேரே காணும் உரிமை சூத்திரனுக் குக் கிடையாது. எனவே தரும விரோதம் அது. தவமிருந்த சம்பூகனை எவ்வித விசா ரணையும் இன்றி நேரே புறப்பட்டுச் சென்று கண்டந் துண்டமாக தனது வாளால் வெட் டிய அரசநீதி கொன்ற அயோக்கியன். 5. பல வகையான மதுவகைகளைக் குடித்த குடிகாரன். 6. வாலியை மரத்திற்குப் பின்னால் மறைந் திருந்து கொன்ற கோழை - பேடி! இவ்வளவும் செய்த இராமர் இந்தியன் பீனல்கோட்படி பல்வேறு கிரிமினல் குற்ற செக்ஷன்கள்படி, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவன். இராமாயணம் நடந்த கதையாக இல்லா விட்டாலும், தெய்வீக புருஷனாகச் சித்திரிக் கப்பட்டு இன்று அயோத்தியில் கோயில் கட்ட வற்புறுத்தும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன சனாதன ஹிந்து அமைப்புகள் கூறுகிறதே - அந்த பாத்திரத்தின் தன்மை - இதிகாசப் படியே - எப்படி உள்ளது என்பதைத்தான் தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கத்த வரும் கூறி வந்தனர்; வருகின்றன. இப்போது ராம்ஜெத்மலானிகளே கூறும் அளவுக்கு பொய்த்திரை விலக்கப்பட்டு, இராமன் சாயம் வெளுக்கிறது! இராம பக்தர்களே, இனியாவது திருந்துங் கள்! இராமாயணத் திற்குப் பதில் திருக்குறள் படியுங்கள். nandri-dk

இராமன் கட்டிய பாலம் எங்கே?

இராமன் கட்டிய பாலம் எங்கே? மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித் தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரின் பெருக்கிய எழுமூன்று பிறவியும் பிணிகள் நீங்கி நெருங்கிய அமரர்க்கெல்லா நீண்நீதியாவர் அன்றே! கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057 மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடை யாக இருந்தது என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக் கிறீ உடைத்து வழிவிட்டான் என்கிறது இப்பாடல். இராமன் கட்டிய பாலத்தை இராமனே உடைத்து விட்டான் என்று கூறுகிறது. கம்பராமாயணம்.. அப்படி இருக்கும்போது இல்லாத பாலத்தை, எப்படி உடைக்க முடியும். அங்கு இருப்பது மணல் திட்டுகள் தான்! பாலமல்ல. இராமாயணத்தில் மகேந்திர மலைக்கு அருகிலிருத்து தான் இராமன் பாலம் கட்டியதாக சொல்லப்படுகிறது. மகேந்திர மலை மத்திய பிரதேசத்தில் ஜபுல்பூரில் உள்ளது, இராமன் கட்டிய பாலத்தை அங்கு போய் தேடிப்பாருங்களேன்!

பார்ப்பனர்களையும் தமிழர்கள் என்பது, இனத் துரோகச் செயலே!?

பார்ப்பான் [ஆரியன்] வருகைக்கு முன் முந்தைய இந்தியா முழுக்க வாழ்ந்து வந்தவர்கள் திராவிடர்கள் [ஆதி தமிழர்]. மத்திய ஆசியாவிலிருந்து ஆடு,மாடுகளை மேய்த்துக் கொண்டு கைபர்,போலன் கணவாய் வழியாக பிழைப்பு தேடி வந்த அயோக்கிய ஆரியக் கூட்டம் இந்தியாவிற்குள் புகுந்து திராவிடர் இனத்தையே சின்னா பின்னப்படுத்திவிட்டது. தமிழ் மொழியை சிதைத்து பல மொழிகளாக்கி விட்டது. தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் குறைந்த அளவே வடமொழி கலந்திருந்ததால், வடமொழியை தூக்கி எறிந்து விட்டு தமிழ் மொழியை தனித்தியங்கவைக்க முடிந்தது. மேலும் தமிழ் நாட்டிலுள்ள [ஈழம் உட்பட] தமிழர்களுடைய பெயர்களிலுள்ள வடமொழிப் பெயர்கள், தமிழாக்கப்படவேண்டும். பல ஊர்ப்பெயர்கள் தமிழாக்கப்படவேண்டும். சிந்துவெளி நாகரிகம் நிராவிட நாகரிகம் ஆகும். பார்ப்பன பி.ஜே.பி.கூட்டம் இதை ஆரிய நாகரிகம் என்று மாற்றியது, இது மீண்டும் திராவிடர் இயக்க முயற்சியால் மாற்றப்பட்டது. எகிப்திய நாகரீகம் கூட நிராவிட நாகரிகம் தான். 'பிணம் இடு' இடம் தான் 'பிரமிடு'. இன்று வரை தமிழை பார்ப்பனர்கள் 'நீச பாஷை' என்று தான் சொல்கின்றனர். ஆட்சிமொழிக் காவலர் இராமலிங்கனாரும், இராமானுஜ தாத்தாச்சாரியும் உறுதிப்படுத்தியுற்றனர். பார்ப்பனர்கள் யாரும் தமிழ்ப் பெயர்களை வைத்துக்கொள்வதில்லை. தந்தை பெரியார் 'நமிழ்நாடு-தமிழர்-தமிழர் பண்பாடு' என்ற நூலில் கூறியுள்ளபடி நிராவிட நாடு என்பது தமிழ் நாட்டை தான்[தற்போதைய], திராவிடர் என்பது தமிழரை தான். திராவிடர் கழகம் என பெயர் வைத்தது, பார்ப்பனர்களை நீக்கிவைக்கத்தான். பார்ப்பனர்களையும் தமிழர்கள் என்பது, இனத் துரோகச் செயலே. நன்றி- பார்த்தசாரதி

உங்கள் சிந்தனைக்கு !

1. கைபர் - போலன் கணவாய் வழியாக வந்தது ஆரியர்களா ? பார்ப்பனர்களா ? தமிழில் பார்ப்பனர் எனப்படும் ஆரியர். 2. தமிழைச் சிதைத்தது ஆரியப் பிராமணக் கூட்டமா ? பார்பனக் கூட்டமா ? ஆரியப் பார்ப்பனக் கூட்டம். 3. பார்ப்பனர் எனும் குலப்பிரிவு எங்கு, எப்போது தோன்றியது ? தமிழர்கள் பார்த்துவந்த இளைஞர் சார்ந்த சேர்த்துவைக்கும் தொழிலை பறித்துக்கொண்டு அதனைவைத்து புரோகிதத் தொழிலை செய்துகொண்டு வரும் ஆரியக் கூட்டமே பார்ப்பனக் குலம். 4. தொழில் அடிப்படையில் தோன்றிய குலப்பிரிவுகளை, கடவுளின் பெயரால் சாதியாய் நிலை நிறுத்தியது ஆரிய (திராவிட) வந்தேறிக் கூட்டமா ? பார்ப்பனர் கூட்டமா ? ஆரிய (பார்ப்பன) வந்தேறிக் கூட்டம் 5. பழங்காலத்தில் இந்தியா முழுவதும் பரவிய மக்கள் கூட்டம் பேசிய மொழி எது ? தமிழ் மொழியா ? திராவிட மொழியா ? திராவிட மொழி (பழந்தமிழ்) 6. உங்களின் கருத்துப்படி திராவிடர்கள் தமிழர், தமிழர்தான் திராவிடர்கள் என்றால், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் என்றான பின்பும் இன்னும் தமிழர்களைத் திராவிடர்கள் என்று அழைப்பதின் உள்நோக்கம் என்ன ? திராவிடர்களின் ஒரு பிரிவினரே இன்றைய தமிழர்கள், அதனால் தமிழர்கள் திராவிடர்கள். தமிழர்கள் என்று சொல்லக்கூடாது என்று சொல்லவில்லை, நீங்கள் தான் திராவிடர்கள் என்று சொல்லக்கூடாது என்று சொல்கிறீர்கள். ‘தமிழ் நாடு’ என்று பெயர் வைக்க சொன்னவர் தந்தை பெரியார். திராவிடர் என்ற பெயரை எந்த பார்ப்பனரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பாதுகாப்புக்காக தமிழர் என்று சொல்லிக்கொள்ள தயாராக இருப்பார்கள். அதனால் தான் தந்தை பெரியார்.இயக்கமாக கட்டமைக்கும் போது பாதுகாப்பு கருதி பார்ப்பனர்கள் அஞ்சும் ‘திராவிடர்’ என்ற பெயரை பயன்படுத்தினார். தமிழர் என்று பார்ப்பனர்கள் பாதுகாப்புக்காக சொல்லிக்கொண்டாலும் தமிழை ‘நீசபாஷை’ என்று சொல்பவர்கள் தான் பார்ப்பனர்கள். ஆட்சிமொழிக் காவலர் இராமலிங்கனாரும, இராமானுஜ தாத்தாச்சாரியும் இதை உறுதிப்படுத்தியுற்றனர். 7. தமிழ்நாட்டுக் கோயில்களில் பூசாரியாய் இருப்பவர்களில் மிகப் பெரும்பான்மையோர் தெலுங்கு, மராட்டி மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட ஆரியப் பிராமணர்களா ? தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பனர்களா ? தமிழர் அர்ச்கராக வரக்கூடாது என்பதில் எல்லாப் பார்ப்பனர்களும் குறியாகத்தானே உள்ளனர். தமிழனை தாழ்ந்த பிறவி என்றல்லவா சொல்கின்றனர். நன்றி- பார்த்தசாரதி

ஆண்டப்பரம்பரை அடிமையானது ஏன் ???

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக என்பது சதவிகிதத்திற்கு மேலான திராவிடர்கள் அடிமைகளாக வாழ்ந்தனர். எந்த எதிர்ப்பும், போராட்டமும், புரட்சியும் செய்யாமல், பயிற்றுவிக்கப்பட்ட சர்க்கஸ் விலங்குகளைப்போல வாழ்ந்தனர். இந்த காலகட்டத்தில், மன்னர்களின் குடும்பங்களும், பார்ப்பனர்களின் குடும்பங்களும் மட்டுமே வசதியாக அதிகாரத்தோடு வாழ்ந்தனர். அதிலும் குறிப்பாக பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி அறிவு கிடைத்தது. பஞ்சம் வந்தால் பட்டினியால் சாவது யாராக இருக்கும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை. ஆரியர்களின் வருகைக்குப் பின், ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கம் தொடங்கியபின், திராவிடர்கள் தங்களின் அடையாளங்களை மெல்ல இழக்கத் தொடங்கினர். அவர்களது மொழியில் கலப்படம் செய்யப்பட்டது, அவர்கள் இனத்தில் கலப்படம் செய்யப்பட்டது, அவர்களின் பண்பாட்டில் கலப்படம் செய்யப்பட்டது, அவர்களது செல்வம் பறிபோனது, அவர்களது உரிமை பறிபோனது, ஆட்டுமந்தை கூட்டமாக அடிமைகளாக வாழ்ந்தனர். இதுதான் திராவிடர்களின் வரலாறு. ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபிறகு, கிடைத்த கல்வியறிவை வைத்து, உலக அறிவை வைத்து, விழிப்புணர்வு பெற்ற சிலர், திராவிடர்கள் மட்டுமே கீழ் நிலையில் இருக்க ஆரியர்களான பார்ப்பனர்கள் எல்லா காலத்திலும் உயர்நிலையில் இருப்பதை உணர்ந்து, அதற்கு எதிராக பார்ப்பனர் அல்லாதோர் இயக்கத்தை ஆரம்பித்து, கல்வி வேலை வாய்ப்பில் திராவிடர்களுக்கும் கொஞ்சூண்டு வாய்ப்பை தாருங்கள் என்று போராடி பெற்றனர். அவர்களால் நீண்டகாலம் பார்ப்பனர்களை எதிர்த்து தாக்குபிடிக்கமுடியவில்லை. தோல்வி அடைந்தனர். காரணம், அவர்கள் பார்ப்பனர்களை எதிர்த்தனரே தவிர பார்ப்பனர்களின் மூல பலத்தை, அவர்களுக்கு சமூகத்தில் இருந்த செல்வாக்கை அழிக்கமுடியவில்லை. அவர்களில் சிலர் பார்ப்பனர்களின் சமூக செல்வாக்கிற்கு ஆதரவாக இருந்துகொண்டு, உத்தியோக செல்வாக்கை மட்டும் குறைக்க முயன்றனர். ஓரளவிற்கு மட்டுமே வெற்றியை அடைய முடிந்த அவர்களை இறுதியில் பார்ப்பனர் வென்றனர். அடுத்த காலகட்டம் ஒன்று தொடங்கியது. தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட, அவரது கொள்கையை கொண்ட சுயமரியாதை இயக்கத்தினரின் காலகட்டம் அது. இந்த சுயமரியாதைகாரர்கள் திராவிடர் கழகத்தை உருவாக்கினர். என்ன செய்தது திராவிடர் கழகம்? என்ன செய்தார்கள் சுயமரியாதைக்காரர்கள்? பார்ப்பனர்களின் மூல பலத்தை, அவர்களின் சமூக செல்வாக்கின் அஸ்திவாரத்தை தகர்க்கும் வேலையை தொடங்கினர். பார்ப்பனர்களின் பலம் என்ன? அவர்களின் அதிகாரம் ஆதிக்கம் எந்த அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டது? கடவுளால் சொல்லப்பட்டதாக சொல்லப்படும் வேதங்கள், வர்ணாசிரமத் தர்மங்கள், அந்த தர்மங்களை கடவுள்கள் நியாயப்படுத்தும் புராண கதைகள், அதை நம்பும் மக்கள், அதற்க்கு காரணமான கடவுள் நம்பிக்கை. இதுதான் அவர்களின் ஆதிக்கத்தின் அஸ்திவாரம். ஹிந்து மதம் என்றால் என்ன? ஆங்கிலேயர் வந்த பிறகு, ஹிந்து என்ற பெயரை சூடிக்கொண்ட அந்த மதம், பார்ப்பனர்களின் வைதீக மதம். அதன் அடிப்படை என்ன? வேதங்களும் வர்ணாசிரம முறையும்தான் அதன் அடிப்படை. அதை நிலை நிறுத்த மனுதர்மம் என்றழைக்கப்பட்ட சட்டம் உதவியது. ஆரிய பார்ப்பனர்களின் வர்ணாசிரம் முறை, நால் வருணம் என்ற அடிப்படையிலான பார்ப்பன, சத்திரிய, வைசிய, சூத்திர என்ற முறையை அடிப்படையாக கொண்டது. அவைகளின் கிளைகளாகவே ஒவ்வொரு வர்ணத்திலும் ஜாதிகள் என்ற முறை உருவானது. இந்த சட்டதிட்டங்களை யார் உருவாக்கினர்? பார்ப்பனர்கள். அந்த சட்டம் என்ன சொல்லுகிறது? பார்ப்பனர்களே உயர்வானவர்கள், சூத்திரர்கள் வேசி மக்கள், இழிநிலையில் வைக்கப்படவேண்டியவர்கள், சூத்திரர்ரகளுக்கு கல்வி தரக்கூடாது, அவர்கள் வேலை செய்வதற்காக மட்டுமே கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்று சொல்லுகிறது. யார் இந்த சூத்திரர்கள்? என்பது சதவிகிதத்திற்கு மேல் வாழ்ந்த மக்கள்தான் சூத்திரர்கள். சரி இதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? இதை ஏன் யாரும் எதிர்க்கவில்லை? இவைகள் அனைத்தும் கடவுளால் சொல்லப்பட்டவை என்றும், மனிதர்களின் வாழ்க்கை விதியால் நிர்ணயிக்கப்பட்டது என்றும், விதி வலியது என்றும், பிறக்கும்போதே விதி பிரம்மாவால் எழுதப்பட்டுவிட்டது என்றும், விதியை யாராலும் மாற்ற முடியாது என்றும், அதில் ஏதாவது சலுகை வேண்டுமானால் கடவுளிடம் வேண்டிக்கொள்ளலாம் என்றும் தொடர்ந்து சொல்லித்தரப்பட்டது. மக்கள் ஏமாற்றப்பட்டனர். மக்களும் அதை நம்பி வாழத்தொடங்கினர். கடவுளுக்கு தரும் பலிகள், கோவிலுக்குத் தரும் காணிக்கைகள், பார்ப்பனர்களுக்கு செய்யும் தானங்கள், விதியை நம்பி வாழ்வது, தர்மத்தை மீறாமல் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை அதில் உள்ள எல்லா சிரமங்களையும் பொறுத்துக்கொண்டு வாழ்வது, அனைத்திற்கும் கடவுளே காரணம் என்று நம்பி கடவுளை பூஜித்தல் ஆகியவை மூலமாக அடுத்த ஜன்மத்திலாவது இந்த ஜன்மத்தில் கிடைக்காத நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டது. ஹிந்து மதம் என்றழைக்கப்பட்ட பார்ப்பன வைதீக மதம் ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மக்கள் அடிக்கடி கொள்ளை நோய், பஞ்சம் பட்டினி, போர் என்று பல காரணங்களினால் இறந்தனர். இந்த சூழலில், மனிதன் இறந்தால் மறுபிறப்பு உண்டு என்ற ஹிந்து மதம் என்று இப்போது அழைக்கப்படும் வைதீக மதத்தின் கோட்பாட்டை மக்கள் மறுக்காமல் முழுமையாக நம்பினர். கடவுள் நம்பிக்கை, விதி, மறுபிறப்பு ஆகிய மூன்றும் அவர்களை போராட தூண்டவில்லை. எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, அமைதியோடு, போராடாமல், விதியை நொந்து, கடவுளிடம் முறையிட்டு, தர்மத்தின் படி வாழ்வது என்பதை அறமாக கொண்டு வாழ்ந்தனர். சமூகத்தின் மிக உயரிய நிலை பார்ப்பனர்களுக்கு மட்டும் இயல்பாக வந்து சேர்ந்தது. எந்த சூழலிலும் பார்ப்பனர்களை கொல்லக்கூடாது கொன்றால் பிரமஹத்தி தோஷம் என்ற சூழலும், பார்ப்பனர்களுக்கு உணவு, உடை, பொருள், நிலம் அனைத்தையும் தானம் செய்வதே தர்மம் என்ற சூழலும் அவர்களை எந்த சூழலிலும் எந்த பஞ்சத்தாலும், எந்த போராலும் கொல்லமுடியவில்லை. அவர்களுக்கு மட்டும் சமூகத்தில் இயற்கை மரணம் என்பது இயல்பாக அமைந்தது. கல்வியும், செல்வமும், பாதுகாப்பான நீண்ட வாழ்வும் உடைய அவர்கள் சமூகத்தின் உயரிய செல்வாக்கான மக்கள் சமூகமாக வாழ்வது எளிதாக இருந்தது. இந்த முறையை, இவர்களது ஆரிய பண்பாட்டை சமூகத்தில் நிலைநிறுத்த, ராமாயணம் , மகாபாரதம் ஆகிய புராணக் கதைகள் கடவுள்களின் கதைகள் என்ற அடிப்படையில் மக்களிடம் தொடர்ந்து சொல்லித்தரப்பட்டது. இன்றளவு அது தொடர்ந்து பல வழிகளில் சொல்லித்தரப்படுகிறது. ராமாயணமும், மகாபாரதமும், அதன் கிளை கதையான கீதையும் திராவிட மக்களை அடிமைகளாக வைத்திருக்க பயன்பட்டன என்பது மறுக்கவியலாத உண்மை. இந்த சூழலில், தந்தை பெரியாரின் கொள்கையை கொண்ட சுயமரியாதைக்காரர்கள், திராவிடர்களின் அடிமைத்தனத்திற்கு காரணமான, பார்ப்பனர்களின் செல்வாக்கிற்கு காரணமான, ஹிந்து மதம், அதன் கடவுள்கள், அதன் நம்பிக்கைகள், அதன் வழக்கங்கள், அதன் மூடத்தனங்கள் அனைத்தையும் கேள்வி கேட்டனர், மறுத்து வாதாடினர், எதிர்த்து பிரசாரம் செய்தனர். பார்ப்பனர்களின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கேட்கப்படாத அல்லது கேட்கவே அஞ்சிய கேள்விகளை பெரியாரின் இயக்கத்தவர்கள் கேட்டனர். பெரியாரின் கொள்கைகள் சூறாவளியாக சுழன்றடித்தன. மக்களுக்கு மானமும் அறிவும் ஊட்டுவதை தனது வாழ்நாள் பணியாக செய்தார் தந்தை பெரியார். மக்களில் பலருக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. மெல்ல சமூக மாறுதல் ஏற்பட்டது. ஜாதியில் தாங்கள்தான் உயர்வானவர்கள் என்று பெருமையாக கருதும் பார்ப்பனர்களே, தங்களது ஜாதி பெயரை வால் போல பின்னால் போட்டுக்கொள்ளும் பழக்கத்தை நிறுத்தும் சூழல் உருவானது. இந்தியாவில் வேறு எங்கும் நடக்காத இந்த சமூக புரட்சி, தந்தை பெரியார் என்ற தனி மனிதரின் கொள்கையாலும், அவர் வழி நின்று போராடிய சுயநலமில்லா சுயமரியாதைக்கரர்களாலும் நடந்தது. இன்றும் ஜாதியை உணர்வு அணையாமல் புகைந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றும் வைதீகத்திற்கு அடிமையாக இருக்கும் எண்ணம் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. அவைகள் அணையாமல் இருக்கும் பணியை, பெரியாரின் கொள்கையால் பாதிக்கப்பட்ட பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்கள் செய்துகொண்டுதான் உள்ளனர். இன்றும் அவற்றை முற்றிலும் அணையாமல் பாதுகாக்க, அவர்கள் பயன்படுத்தும் எரிபொருள் “ஹிந்து மதம்” “கடவுள் நம்பிக்கை” ஆகியவைகளே. என்றாவது ஒருநாள் அவர்களுக்கு சாதகமாக காற்று வீசும் போது, சூழல் உருவாகும்போது, அதை ஊழித் தீயாக மாற்ற கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர். இந்நிலையில்..... இந்து மதத்தை எதிர்க்காதே, பார்ப்பனர்களை மட்டும் எதிர்த்தால் போதும் என்று புதிதாக சிலர் கிளம்பியுள்ளனர். இவர்கள் நுனிமரத்தில் நின்றுகொண்டு அடிமரத்தை வெட்டி சாய்க்கும் வல்லுனர்கள். திராவிட இயக்க வரலாறை மறந்து, அது சொல்லித்தரும் பாடத்தை மறந்து, புது விளக்கம் தருகிறார்கள். அப்போதைய சூழல் வேறு, இப்போதைய சூழல் வேறு, என்று வியாக்கியானம் வேறு. பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்று நினைக்கும் என்று சொல்லுவதைப்போல, இவர்கள் தங்களின் தற்கால சூழலை வைத்து எல்லாம் மாறிவிட்டதாக கருதுகின்றனர். அது உண்மையும் இல்லை. சமூகத்தை புரட்டிப்போட காரணமாக இருந்த கொள்கைகளை ஒழிப்பதன் மூலமாக திராவிட இயக்கத்தை வலுவிழக்க செய்து, அதன் மூலமாக வெற்றிபெறலாம் என்று எதிரிகள் கருதுகின்றனர். கொள்கையற்றவர்களை, பெரியாரின் கொள்கைக்கு எதிரானவர்களை திராவிட இயக்கத்தில் வளர்த்தெடுப்பதன் மூலமாக, திராவிட இயக்கத்தில் பெரியாரின் கொள்கையை இல்லாமல் செய்வதன் மூலமாக, பார்ப்பனியத்தை அதன் செல்வாக்கை மத நம்பிக்கையின் பெயரால் உயர்த்த முடியும் என்று நம்புகின்றனர். அதற்கு இவர்களும் துணை போகின்றனர். பார்ப்பனர்களுக்கு எதிரானது திராவிட இயக்கம் அல்ல, அவர்களுக்கு எதிரானது திராவிட இயக்கத்தில் உள்ள பெரியாரின் கொள்கைகளே. அவர்களுக்குத் தெரிந்த இந்த உண்மை உங்களுக்குத் தெரியாமல் போவதுதான் திராவிட இயக்கத்தை அழிவுக்கு கொண்டுசெல்லும் காரியத்தில் உங்களை ஈடுபடுத்துகிறது. தம்பிகளா.... ஆரியத் தீயை பரவாமல் கட்டுக்குள் வைக்கும் நெருப்பு வளையம் பெரியாரின் கொள்கைகள். அவர்கள் எப்படி வர்ணாசிரமத் தீ கங்குகளை அணைந்துவிடாமல் பாதுகாக்கிறார்களோ, அது போலவே பெரியாரின் கொள்கை என்னும் தீ கங்குகளை அணைந்துவிடாமல் பாதுகாப்பவர்கள் நாங்கள். எங்களுக்குத் தெரியும் எதை எதிர்ப்பது என்று? எங்களுக்கு பாடம் நடத்த முயலாதீர்கள்!நன்றி -திராவிடர் புரட்சி

'சாதியை ஒழிப்பதற்காக மூன்றாண்டு சிறை!!

நான் எதற்காகச் சிறை செல்கிறேன்? சூதாடிய குற்றத்துக்காகவா? கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்துக்காகவா? கொள்ளைக் குற்றத்துக்காகவா? கொலைக் குற்றத்துக்காகவா? மோசடிக் குற்றத்துக்காகவா? பலவந்தப் புணர்ச்சிக் குற்றத்துக்காகவா? பதுக்கல் - கலப்படம் குற்றத்துக்காகவா? சாதிவெறியின் கலவரக் குற்றத்துக்காகவா? என்ன குற்றத்துக்காக நான் சிறை செல்கிறேன்? சாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்! மறியல் செய்தேன்! சிறை சென்றேன்! சர்க்கார் கண் விழிக்கவில்லை. ஆகவே, சாதிக்கு ஆதாரமான சட்டத்தை கிழித்துத் தீயிலிட்டாவது இந்திய சர்க்காரின் (அரசின்) மனதை மாற்றலாமா, என்று கருதி அதைச் செய்தேன். இதில் எந்த உயிருக்கேனும் சேதமுண்டா? எந்தப் பொருளுக்கேனும் நாசமுண்டா? இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்றால், இதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டாமா? 'சாதியை ஒழிப்பதற்காக மூன்றாண்டு சிறை வாசஞ் செய்தான்' என்பதை விடப் பெரும்பேறு, முக்கியக் கடமை, வேறென்ன இருக்கிறது? - தோழர் ஈ.வெ.ரா ('விடுதலை', 09/11/1957)

Tuesday, 26 February 2013

இந்தியாவை ஆளும்வர்க்கம்??????

இதுதான் உண்மை.! அறிந்து கொள்ளுங்கள்.!!
அறியாதவர்களுக்கு அறிய செய்யுங்கள்..!!!

ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்!
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166பேர்!
வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்!
பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்!
மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்!
கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர்.
அதில் பிராமணர்கள் 2376 பேர்!
பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்!
ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!

-குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் )

மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் இவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிராக ஏன் கிளர்ந்தெழுந்து பிறரை தூண்டி விடுகின்றனர் ? இடஒதுக்கீடுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர்
என இப்போது புரிகிறதா ?

பெரியார் அழைக்கிறார் !


பெரியார்






















பெரியார்















பெரியார்


தேவதாசி ஒழிப்புச் சட்டம்




குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்களை கோயிலுக்குப் பொட்டுக் கட்டிவிட்டு தேவரடியார் (தேவடியாள் என்றுதான் வழக்கில் சொல்லுவார்கள்) என்று முத்திரை குத்தும் கேவலமான முறை ஒழித்துக்கட்டப் பட்டதும் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான்!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்தான் இதற்கான மசோ தாவை முன்மொழிந்தார். அதற்கும் பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு! - அதிலும் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்வாள்தான் அண்டங்காக்கைக் கூச்சல்.

தாசிகுலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது. பலருக்கும் இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. இப்படிக் கூறுவதால் என்னைத் தாசிக் கள்ளன் என்று கூடக் கூறலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை.

சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதைத் திரும்பச் செல்ல விரும்பு கிறேன். தாசிகள் கோயில் பணிக்கென்று படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்துவிட்டால் பரதநாட்டியக் கலை அழிந்து விடும். ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயம் ஆகும்!” என்று கதறினார்.

ஆகாயத்துக்கும், பூமிக்கும் தாவினார்களே!
பார்ப்பனக் கொழுப்புக்கு இந்த ஒன்று போதாதா? சாட்சியம் கூற.
தந்தை பெரியார் சவுக்கடி கொடுத்தது போல பதிலடி கொடுத்தார்.


ஒரு குலத்தில் மட்டும்தான் தாசிகள் தோன்ற வேண்டுமா? இதுதான் ஆண்டவன் கட்டளையா? மற்றக் குலத்துப் பெண்களும் மாறி மாறிப் பொட்டுக் கட்டிக் கொள்ளக் கூடாதா? என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படிக் கேட்டார்.

சட்டமன்றத்தில் ஒரு பெண்ணாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் சத்தியமூர்த்தி அய்யரை நோக்கிப் போட்டார் கிடுக்கிப்பிடி! ரோஷம் இருந்தால் மனுஷன் தூக்கு மாட்டிக் கொண்டு சாகலாம்தான்!
‘தொன்றுதொட்டு உள்ள இந்த வழக்கத்திற்கு இது காறும் இருந்து வந்த எங்கள் குலப் பெண்கள் செய்தது போதும்; இனி உங்கள் குலப் பெண்கள் தேவர்க்கு அடியார்களாக இருந்து மோட்சப் பிராப்தி பெறலாமே!’ என்றாரே பார்க்கலாம். வாயாடி சத்தியமூர்த்தி, வாயைப் பொத்தி மவுன சாமியார் ஆகிவிட்டார்.

திருவாளர் சத்தியமூர்த்தி, இந்த மசோதாவை எதிர்த்துப் பேசும் போது சொன்ன ஒரு கருத்து மிகவும் கவனிக்கத்தக்கது. பார்ப்பனர்கள் எந்த அளவிற்கு எச்சரிக்கையாக இருக்கக்கூடியவர்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு இது.

“இன்று தேவதாசி தொழிலை நிறுத்தினால் ராமசாமி நாயக்கர் நாளை அர்ச்சகர் தொழிலை நிறுத்த சட்டம் செய்ய வந்து விடுவாரே!” என்று ஆத்திரப்பட்டுப் பேசியிருக்கிறார்.